பட்டு வணிகத் திலகமாகவும்,
கலைகளைக் காக்கும் கரமாக மிளிரும் பத்மஸ்ரீ நல்லி செட்டியார் அவர்களின் மகுடத்திற்கு மற்றொரு சிறகாக பத்மபூஷன் விருது பெறவிருக்கும் 86 அகவை நிறைந்த
நல்லிதய செம்மலை
குடியரசு திருநாளன்று (26.1.25) காலை நேரில் அவரின் கடையில் சந்தித்துப் பட்டாடை சூட்டி வாழ்த்து தெரிவித்துவிட்டு
உடனே அடுத்த நிகழ்வாக
நாட்டு மக்கள்
நலமுற்று வாழவும் நானிலத்தவர் மேனிலை எய்தவும்-வேண்டிப் பாடல்கள் புனைந்த பாரதியின் அனைத்து ஆக்கங்களையும் எழுத்தெண்ணி ஆண்டாண்டுக் காலமாக ஒரே பணியாக ஒப்பற்ற பணியாக செம்மையற செய்துவரும் பேரறிஞருக்கு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெறவிருக்கும்
எந்தையாரின் இனிய நண்பர் மாபெரும் தொகுப்பாளர்
பாரதியாரின் பெறாத மகன்
தனிநிலை பல்கலைக்கழகமாக மிளிரும் 91 அகவை நிறைந்த
அண்ணல் சீனி விசுவநாதன் அவர்களை குடியரசு நாளன்று (26.1.25) காலை மேற்கு மாம்பல இல்லத்தில் நேரில் சந்தித்து வணங்கிப் பட்டாடை சூட்டி வாழ்த்திய போது பெரியவரிடம் சொன்னேன் கவியரசு கண்ணதாசன் உங்களைக் குறித்து சொன்ன வரிகளை இப்போது மாற்றிச் சொல்லுகிறேன்
பாரதியே
இன்றிருந்து இந்த பத்மஸ்ரீ விருது செய்தியினை அறிந்திருந்தால் சபாஷ் பாண்டியா!
என்று தட்டிக் கொடுத்து ஒரு மாலையும் போடுவார் என்றேன்
அதற்கு பாரதிய பேரறிஞர் உடனே நாற்காலியிலிருந்து எழுந்து திரும்பி மேலே உள்ள பாரதியின்
இளைய சகோதரர்
சி விசுவநாத ஐயர் ஒளிப்படத்தை சுட்டிக்காட்டி வணங்கி
அவரால் பெற்ற பெருமை இன்று நான் பெறவிருக்கும் இவ்விருது என்று நெகிழ்ந்து சொன்னார்.
உடன் வந்த அப்பாவின் உதவியாளர் பொன்னேரி பிரதாப்புடன் சொன்னேன் நன்னாளாம் குடியரசு திருநாளில் இரு பேரறிஞர்களையும் இன்று சந்தித்த பொழுது நினைவில் வந்த வரி என்ன தெரியுமா என்றேன்
என்ன வரி என்றார் ?
உடன் சொன்னேன்
வாழ்க வாழ்க பாரத சமுதாயம் !






Add a Comment