

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி. தேனினும் இனிய தமிழால் வளர்த்து
நானிலம் மகிழ நல்கிய
மூத்த மகன்
முத்து மகன்
மூப்பியல் மருத்துவர்
எங்கள் இனிய அண்ணன்
கண்ணன்
காப்பென வந்து
காதல் கொண்டு
கைப்பிடித்த துணைநலம்
மருத்துவர் சாந்தி கண்ணன்
ஆகியோர்
மணி விழா
31.01.2025 வியாழக்கிழமையன்று காலை 9.00 முதல் 12.00 மணி வரை திருக்கடவூர் அருள்மிகு அபிராமி அம்மை உடனமர் அமுதகடேசர் ஆலயத்தில்
மாதொருபாகருக்கு
வாழையடி வாழையெனத் திகழும்
வேள்வி நெறி வித்தகர்
திரு டி எஸ் வி சுந்தரமூர்த்தி குருக்கள் தலைமையில்
நன்னிகழ்வு இனிதே நடைபெற்றது.
Add a Comment