a5583041-7f3b-4821-bd33-af99d5b712fc

தடுப்பூ எங்கள் தோளைத்தொட்டது !

மகளிர் தினத்தில் மாதர் மாட்சியை நினைத்தேன் .என் மனத்தரசியின் இழப்பை எண்ணி ஆற்ற முடியாமல் சில நொடிகள் கண் கலங்கினேன் .

என் அருமைப் பெயர்த்தியும் , எங்கள் குடும்பத்தின் நிகரிலாச் செல்வமும் ஆகிய டாக்டர் நிகிதா தாரா கண்ணன் எனக்கு ஆசுதிரிலேயாவிலிருந்து ” மகிழ்ச்சியில் திளைக்கும் மனிதன் ” (The Happiest Man on Earth ) என்ற இனிய நூலை எனக்கு அனுப்பிக் ” கண்ணீரைத் துடைத்துக் கொள்ளுங்கள் .கருத்தோடு இந்த நூலைப் படித்து மனத்தளர்ச்சியை நீக்கிக் கொள்ளுங்கள் தாத்தா ” என்று எழுதியுள்ளார் .

இந்த நாளில் அருளும் , நானும் என் செயலாளர் பொன்னேரி பிரதாப் செய்த அருமையான ஏற்பாட்டின் பேரில் காஞ்சி காமகோடி மழலையர் அறக்கட்டளை நல மருத்துவமனைக்குச்(8.3.2021) சென்றோம் .

எங்கள் குடும்பத்தின் தனித்தெய்வம் மருத்துவமாமணி டாக்டர் பிரியா இராமச்சந்திரன் எனக்கு ஆறுதல் சொற்களைக் கூறினார்கள் .

என்ன நடந்தது தடுப்பூ எப்போது இட்டார்கள் என்றே தெரியவில்லை .

தண்மை பொங்கித் ததும்பும் மருத்துவ அரங்கை விட்டு வெளியே வந்தோம்.

அவர்கள் வழியனுப்பிய போது என் கண்ணில் நீர் வழிந்தது .அடுத்தபடி முகத்தில் புன்னகை ஒளிர்விட்டிருந்தது

வாழ்க என்று என் வாய் வாஞ்சையோடு முணுமுணுத்தது .

மருத்துவமாமணி டாக்டர் பிரியா அவர்கள் துணைவேந்தராக அமர்ந்தது போன்ற கனவு என் கண்ணில் தனைப் படர்ந்தது .

ஆக்சுபோர்டுக்குத் தலைவணங்குவோம் என்று நேற்றுத்தான் கட்டுரை எழுதினேன் .அந்த மருந்து தான் தடுப்பூசியாக(0.5 அளவு கோவீஷில்டு) இட்டுக்கொண்டோம் .

ஒளவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *