ஊரன் மற்று யாவருக்கும் ஊதியமே!

தினமணி – 14 7 2022

பக்கம் எண் : 5

ஊரன் மற்று யாவருக்கும் ஊதியமே!

சன்மார்க்க உலகத்துக்கு இப்படி ஒரு ஞானத்துறவி வாய்ப்பது அரிது .

எழுத்து, பேச்சு, எண்ணம், தொண்டு மேலாண்மை என அனைத்து நிலைகளிலும் அவர் மாசற்ற தொண்டராக , அருளாளராக நாடு போற்ற வாழ்ந்தார்.

நூற்றாண்டைத் தொடுவார் என்று எண்ணித் தமிழுலகம் அவரைப் போற்றி வந்தது.

வாழ்வெல்லாம் வடலூருக்கே – மூச்செல்லாம் வள்ளலாருக்கே என்று வாழ்ந்த சமரச ஞானப் பெருஞ்சுடர் அணைந்ததே என்று அன்பர்கள் மனம் ஓலமிடுகிறது.

தினமலர் – திருச்சி பதிப்பு

பக்கம் எண் : 15

” என் உயிர் தழுவிய சன்மார்க்க ஞானியாராகத் திகழ்ந்த அடிகளாரின் மறைவு, ஆற்ற முடியாத அவலத்தைத் தருகிறது.

‘ ஊரன் மற்று யாவருக்கும் ஊதியமே ‘ என்ற மணிவாசகர் தொடரைத்தான் எண்ணி எண்ணி மனம் வெதும்புகிறது .
.
நூற்றாண்டைத் தொடுவார் என்று எண்ணி எண்ணித் தமிழுலகம் அவரைப் போற்றி வந்தது.

‘ வாழ்வெல்லாம் வடலுாருக்கே,
மூச்செல்லாம் வள்ளலாருக்கே ‘

என்று வாழ்ந்த சமரச ஞானப் பெருஞ்சுடர் அணைந்ததே என்று அன்பர்கள் மனம் ஒலமிடுகிறது ”

என்று ஒளவை நடராசன் கூறியுள்ளார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *