POST: 2022-03-12T10:18:32+05:30

மீளாத கரந்தை மேலோர் !

கரந்தைத் தமிழ்ச்சங்கத் தலைவர் பெருந்தகை செந்தமிழ்வேளிர்
ச இராமநாதன் அவர்களின் மறைவுச்செய்தி எதிர்பாராதது .

ஆற்ற முடியாத அவலம் தருவது .

கரந்தைக் கல்லூரியை – கலை அறிவியற் கல்லூரியாக நாளுக்கு நாள் புகழேற்றி மாற்றிய பெருமை அவரைச் சாரும் .

எண்ணற்ற தமிழ் விழாக்களை ஆர்வத்தோடு நடத்தினார் .

தலைமைச் செயலகம் வரும்போதெல்லாம் என் இல்லத்துக்கு வந்து என்னிடம் பரிவோடு பேசினார் .

பெருமிதமாக வாழ்ந்த அவரை மக்கட் செல்வங்கள் மருத்துவத் திலகங்களாகவும் வளர்ந்து அவர் வாழ்வுக்கு மேலும் புகழ் சேர்த்தனர் .

நலிவுக்கு யாரும் தப்ப முடியாது போலும் !

பெருந்தகையின் நினைவு கரந்தையை என்றும் வழிநடத்தும்

குடும்பத்தாருக்கு என் ஆறுதல்

கலங்கிய மனத்தோடு

ஒளவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *