ஆற்றமுடியாத துயரம்
அன்பிற்குரிய மொழிபெயர்ப்புத்துறை இயக்குநர்
டாக்டர் ஒளவை அருள் அவர்களுக்கு ,
வணக்கம்.
தங்கள் அன்னையாரின் மறைவை அறிந்து பெரிதும் வருந்தினேன் .
அவர்கள் உங்களைக் ” சான்றோன் எனக் கேட்ட தாய் ” ஆவர் .
அவர்கள் தஞ்சையில் இருக்கும் போது என்னை மிகவும் ஊக்கப்படுத்தி மேலும் மேலும் எழுதத் தூண்டினார்கள்
அவர்களை நான் எப்படி மறக்க முடியும் ?
அன்னை தந்தை நிழலில் வளர்ந்தவர் நீங்கள்.தாயின் நிருவாகத் திறனும் – தந்தையின் அறிவுத் திறனும் உங்கள் உடைமையாகப் பொலிக .
தந்தையார் உடல்நலம் பேணுங்கள்.
அவர்கள் தமிழ்நாட்டின் சொத்தாவார் .
மேடைகள் தோறும் ஒலித்த அந்த யாழின் நரம்பு கட்டுக் குலையாதவாறு எழுந்துவர இறைவனை வேண்டுகின்றேன் .
அன்பன்
பேராசிரியர் முனைவர்
கு .வெ .பாலசுப்பிரமணியன்
எம் .ஏ .,எம்.பில் .,பி.எச் .டி .,
திருவள்ளுவர் ஆண்டு 2051 ,
ஆவணி 4

Add a Comment