POST: 2012-08-17T13:24:20+05:30

அருந்தமிழில் அயற்சொற்கள் நூலின் பின் அட்டையில் முனைவர் அருளைப்பற்றிவெளியான கவிஞர் கபிலனின் கவி மழை:

குயில்ஊதும் குழல்போலச் சிரிப்பான்;வானின்

குருத்துநிலா ஒளி போன்ற அழகன்;அந்த

மயில் தோகைக் கூந்தல்போல் அடர்ந்த கேசம்;

மாளிகையில் விலைபோகும் மனிதன் இல்லை;

வெயில் மீது நடந்தாலும் கறுக்க மாட்டான்;

வின்மீணைக்கூறு கட்டி நிலவு செய்வான்

அயல்மொழியில் தமிழ்ச்சொல்லை ஆயந்தான்;

எங்கள் ஒளவைத்தாய் பெற்றறெடுத்த ஆத்தி சூடி:

மருக்கொழுந்து வாசம் தான் பேச்சு;சென்னை

மாநிலத்துப்பல்கலையில் தமிழைக் கற்றான்;

கறிக்குழம்பு உண்ணாத சைவப்பிள்ளை;

கவிதைக்கும் உரைநடைக்கும் பிறந்த பிள்ளை;

வரிப்புலி தான் வரிக்குதிரை அல்ல;முப்பால்

வளர்ப்பு மகன்;மூதறிஞர் பேரன்;உப்புக்

கரிக்காத தமிழ் உணவு;கம்பன் செய்யுள்;

கணுவில்லாக் கரும்பிற்குக் கபிலன் வாழ்த்து

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *