முயல்வாருள் எல்லாம் தலை நன்மனச் சுடர்கள் நரசிம்மன் மாமா - திலகவதி அத்தை இனிய 64 ஆம் ஆண்டு திருமண நாள் வாழ்த்தும் வணக்கமும் இணையற்ற இணையரின் திருமணம் காஞ்சிபுரத்தில் 23.6.1961 ஆம் ஆண்டு நடந்தது . அருள் பெருகு திலகவதியார் என்ற தொடரை உரைவேந்தர் ஔவை துரைசாமி அவர்கள் அடிக்கடி சொல்வார்கள் என்று அப்பா பலமுறை சொல்லக் கேட்டுள்ளேன். கீழ் வீதியில் செல்வாக்கு வாய்ந்த குடும்பமாக நரசிம்மன் மாமா குடும்பம் விளங்கியது. கடமையும் பொறுப்பும் நரசிம்மன் மாமா அவர்களுக்கு இரு கண்களாக ஒளிர்ந்தன . அத்தை ...
POST: 2025-06-25T08:54:07+05:30
இவற்(கு) ஈத்(து) உண் மதி கள்ளே! எனத் தொடங்கும் ஔவையாரின் புறநானூற்றுப்பாடல் எண் இரு நூற்(று)த் தொண்ணூ(று) எவருக்கும் ஈத்(து)உவக்கும் கருத்துகளை ஏந்தி வரும் உலகத்தமிழிதழ் இரு நூற்(று)த் தொண்ணூ(று)
POST: 2025-06-24T07:13:55+05:30
ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு 24/223, என்.எஸ்.சி. போசு சாலை, சென்னை-600001 மின்னஞ்சல்: esplanade@ymcamadras.org.in; தொலைபேசி: 044-25396792 பண்பாளர் பக்தவத்சலம் ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல் இடம் ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு அரங்கம் நாள் : 24-06-2025, செவ்வாய்க் கிழமை, மாலை 6.00 மணி தலைமை : முனைவர் ஔவை அருள், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர், தமிழ்நாடு அரசு நினைவுரை : முனைவர் மறைமலை இலக்குவனார், ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றத் துணைத்தலைவர் உங்கள் வருகை எங்கள் விழைகை! முனைவர் ஒளவை. ...
POST: 2025-06-23T09:59:38+05:30
ஆய்வும் - மகிழ்வும் தமிழ் வளர்ச்சித் துறை நாமக்கல் அலுவலகமும் திண்டுக்கல் அலுவலகத்தையும் கடந்த வெள்ளிக்கிழமை 20.6.25 ஆய்வு செய்யும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. நாமக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகத்தில் வரவேற்பு முகமாகவே மாபெரும் தமிழ்க்கவிஞர்களின் திருவுருவப் படத்தினை பதாகையாக காட்சித்தருவதைக் கண்டு மகிழ்ந்தேன்.
பாவேந்தரின் நூலாட்சி தங்களால் உயரக் கண்டோம்!
அப்பாவின் இனிய நண்பர் பேராசிரியர் இராமர் இளங்கோ(10.9.1944-19.6.2025)மறைந்தார் என்ற செய்தி துயர் தருகிறது. பலமுறை அப்பாவும் பேராசிரியர் அவர்களும் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசியதைக் கேட்டு மகிழ்ந்துள்ளேன். பாவேந்தர் பாரதிதாசன் அவர்களைக் குறித்த அரிய தகவல்களை தொகுக்கும் பேராற்றல் இவருக்கு உண்டு என்று அப்பா அடிக்கடி சொல்லி மகிழ்வார். பாவேந்தரின் பல நூல்களோடுஅரிய தமிழ் நூல்களையும்உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக பணியாற்றிய எட்டாண்டுப் பணிக்காலத்தில் பெருமளவு வெளியிட்டுப் பெரும ...
தந்தையர் தின நிகழ்வு – பிரித்தானிய இந்திய வானொலி (British Indian Tamil Online Radio)
19.6.2021 சனிக்கிழமை,மாலை 3.30 மணி…. பத்மஸ்ரீ ஒளவை நடராசனார் மகன் அருள் அவர்கள் தன் அப்பாவைக் குறித்து நேரலை உரை இலண்டன் வாழ் தமிழ்ப் பெருமக்களே!உங்கள் எல்லோரையும், இந்நன்னாளில், தந்தையர் தினத்தன்று அலை நிலையில் உரையாற்றுவதில் பெருமிதமடைகின்றேன். இலண்டன் வாழ் தமிழர் அண்ணல் சக்திதாசனின் வழிகாட்டுதலால் தந்தையர் தினத்தைப் பற்றி ஓரிரு கருத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். ‘தந்தையர் நாடென்னும் போதினிலேசக்தி பிறக்குது மூச்சினிலே’என்ற பாரதி வரிகள்தான் நமக் ...
POST: 2025-06-22T10:11:59+05:30
பாவேந்தரின் நூலாட்சி தங்களால் உயரக் கண்டோம்! அப்பாவின் இனிய நண்பர் பேராசிரியர் இராமர் இளங்கோ (10.9.1944-19.6.2025) மறைந்தார் என்ற செய்தி துயர் தருகிறது. பலமுறை அப்பாவும் பேராசிரியர் அவர்களும் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசியதைக் கேட்டு மகிழ்ந்துள்ளேன். பாவேந்தர் பாரதிதாசன் அவர்களைக் குறித்த அரிய தகவல்களை தொகுக்கும் பேராற்றல் இவருக்கு உண்டு என்று அப்பா அடிக்கடி சொல்லி மகிழ்வார். பாவேந்தரின் பல நூல்களோடு அரிய தமிழ் நூல்களையும் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக பணியாற்றிய எட்டாண்டுப ...
மாசிலா மணியே வலம்புரி முத்தே !
மூன்றாண்டுகளுக்கு முன்பு தந்தையார் எழுதிய கல்வெட்டு வரிகள் என் மாமனாரை நான் இளம் பருவத்தில் இருந்து அறிவேன். தாத்தா என்று அழைத்துப் பழக்கப்பட்டேன். என் தந்தையாரின் தாய் மாமன் என்ற உறவு வகையில் பின்னி வருபவர். உழைப்புக்கு இன்னொருவரை என்னால் சான்று காட்ட முடியவில்லை.. மனம் வருந்தியதால் பிடிவாதமாகத் தன் இரு மக்கட் செல்வங்களையும் கையில் ஒரு மகளும், தோளில் ஒரு மகளுமாக நான் வளர்த்துக் காட்டுகிறேன் என்று சூளுரைத்து வந்து தன் வியர்வையையும், உதிரத்தையும், கண்ணீரையும் குடம் க ...
POST: 2025-06-21T10:19:56+05:30
மாசிலா மணியே வலம்புரி முத்தே ! ============================= மூன்றாண்டுகளுக்கு முன்பு தந்தையார் எழுதிய கல்வெட்டு வரிகள் என் மாமனாரை நான் இளம் பருவத்தில் இருந்து அறிவேன். தாத்தா என்று அழைத்துப் பழக்கப்பட்டேன். என் தந்தையாரின் தாய் மாமன் என்ற உறவு வகையில் பின்னி வருபவர். உழைப்புக்கு இன்னொருவரை என்னால் சான்று காட்ட முடியவில்லை.. மனம் வருந்தியதால் பிடிவாதமாகத் தன் இரு மக்கட் செல்வங்களையும் கையில் ஒரு மகளும், தோளில் ஒரு மகளுமாக நான் வளர்த்துக் காட்டுகிறேன் என்று சூளுரைத்து வந்து தன் ...
உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமி அவர்களுக்கு மணிவிழா பாராட்டு – 1963
" சிவகங்கை வள்ளுவர் இலக்கியப் பேரவையின் சார்பில்மூன்றாம் ஆண்டுக் குறள் விழாவில் - உரைவேந்தர். ஒளவை சு.துரைசாமிஅவர்கட்குக் கவிஞர் மீரா பாடியளித்த மணிவிழாப் பாராட்டிதழ் " .1963 *ஆண் ஒளவை வையைநதிக் கரையினிலே வளமுண் டாக்கிவருகின்ற வாரிதியே ! கண்ணில் தீட்டும்மையைவிடக் கறுப்பான மனவி ருட்டைமாய்க்கின்ற கதிரவனே ! பசுவின் தூயநெய்யைவிட மணமுள்ள குறட்க ருத்தைநெடுஞ்செழியன் நிலமிருந்து வழங்கி இந்தவையகத்தை வாழ்விக்கும் மழையே ! என்றும்வளர்கின்ற துரைசாமி மலையே ! வாழ்க ! தரைவேந்தர் வேலாட்சி குற ...




