POST: 2012-10-19T15:29:35+05:30

இந்திய நாடு விடுதலை அடைந்ததும் 500 க்கு மேற்பட்ட தனியரசுகளாக இருந்த நாடுகளையெல்லாம் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் தனி முயற்சியால் பாரத நாடு தனிவடிவம் பெற்றது.அதன் பின்னர் தான் மாநிலங்கள் மொழி வழி என பிரிக்கப்பட்டது. ஒரு மாநிலத்தின் பெரும்பான்மையான மக்களால் பேசப்படும் மொழியில் ஆட்சி அமைந்து மக்களுக்காக மக்கள் மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெக்கும் முறையால் மொழியின் நிலைமை செளுமைப்பெற்றது. மொழியின் பெயராலயே தமிழ்நாடு,கேரளம்,ஆந்திரப்பிரதேசம்,கருநாடகம் என்று பெயர்ப்பெற்றன

POST: 2012-10-18T17:35:20+05:30

வாழ்க சிந்தனைகளின் தோழர் இரா.குமரவேலர்! கவிஞர் ஈரோடு தமிழன்பன் கடந்துபோன கணக்கற்ற பகல் இரவுகள் படைத்து வைத்த புத்தக்கத்தில் இரா குமரவேலர் பெயர் இருக்கிறது -மின்னும் எழுத்தில்! கடக்க வரும் காலம் இன்னும் எண்ணற்ற பக்கங்களோடு காத்திருக்கிறது இவருக்காக. அகவை எழுபத்தைந்து என்பது காலப்பெருவெளியில் கண்ணிற்குப் புலப்படாத சிறிய புள்ளி என்றாலும் இவரிடத்தில்இருந்து இவரைப் பெரிய புள்ளி என்று நமக்கு அது இனம் காட்டுகிறது அதிகாலை அமைதிப்பொழுதை எது இயற்றி வைக்கிறது? நள்ளிரவு மவுனப்பா ...

POST: 2012-10-15T13:56:13+05:30

ஒüவை நடராசனிடம் பேசும்போது ஜாக்கிரதையாகப் பேச வேண்டும். அவரிடம் ஒரு சங்கடம். சாதி, மதம், சினிமா, பொருளாதாரம், கண்ணகி சிலை, கல்வி முதலிய விஷயங்களைப் பற்றி அவருக்குப் பல கருத்துகள் இருக்கின்றன. அவற்றைச் சொல்லிவிட்டு கடைசியில்,""நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?'' என்று ஒரு கேள்வி போடுவார்! அந்த விஷயங்களில் நமக்கென்று ஏதாவது ஒரு கருத்து இருந்தால் பிழைத்தோம், இல்லையென்றால் விழிக்க வேண்டும்! தமிழைப் பற்றி பேச்சு வந்ததால் நான், ""கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே தோன்றியவர்கள் நாம் என்று சொல்லிக் கொள்க ...

POST: 2012-10-14T21:31:18+05:30

Wonderful day,After long time attended slew of functions today with my Parents: 1)75th Birthday Celebrations of my Uncle Dr R Kumaravelan,versatile and Scholarly tamil Professor of Pachaiyappas College-Well versed in English,French and German and Research guide for more than 500 students and an avid chess player.His children Dr Punnagai,Malligai and Iniyavan celebrated his birthday with style and elan and in Jayapushpam Hotel in Koyambedu.Wish him more happy and prosperous years ahead. 2)Atten ...

POST: 2012-10-09T22:03:43+05:30

அமெரிக்கா நாட்டில் வாழும் ஈழத்தமிழர் தன் மனைவியோடு தமிழகத்திற்கு வந்தார். அவருடைய மாமனார் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பேரம்பலம் ஆவார். தேன் போல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அம்பலம் ஆங்கிலத்திலிருந்து பால் போல் அரிய வரலாற்று நூல்களை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். Budget என்பதை வரவு செலவுத்திட்டம் என்பதை விட பாதீடு என்ற புறப்பொருள் வெண்பாச்சொல்லை நீங்கள் புகுத்தலாகாதா என்று என் தந்தையாரை கேட்டாராம். ஈழத்தமிழர்களுக்கு இனவுணர்வும்,மொழிக்காதலும் பெரியதாயிற்றே,உங்கள் குழந்தை தமிழ் பேசுவ ...

POST: 2012-10-09T21:07:55+05:30

கண்மூடி கனவு காண்பவர்கள் எல்லாம் ஒரு கருத்தைச்சொன்னால் அதில் நிறைவே இருக்காது. அரசியல் அதிதிகளை வெளியே சொல்ல முடியாமல் வெறுப்போடு முணுமுணுத்துக்கொண்டிருந்தால் அதனால் அமைதி ஏற்பட வழியமையாது. மதவாதிகள் தாங்கள் அறிந்தவைகளாக பத்தங்களை சொல்லிகொண்டிருந்தால் சமயம் என்ற போக்கு உருவாகாது. இந்தக்கொடுமைகளையெல்லாம் போக்குவதற்கு ஒரே வழி இத்தகைய கருத்துகளை பரப்பும் நூலாசிரியர்களை பொறுத்துக்கொண்ருபதை விட ஒருத்து விட வேண்டும்,தொலைத்து விட வேண்டும் உலகத்தார் உண்டு என்பதை இல்லையென்று மறுப்பதற்கு எவனக்கும் ...

POST: 2012-10-08T23:25:00+05:30

If every Dreamer of innovations may propagate his projects,there can be no settlement... If every murmurer at government may diffuse discontent there can be no peace... If every sceptic in theology may teach his follies there can be no religion... The remedy against these evils is to punish the authors. No member of society has the right to teach any doctrine to what society holds to be true! Samuel Johnson