பிரிவால் வருந்துகிறோம் திரு சுப்பிரமணியன் நடராஜன் அவர்களின் இழப்பு வருத்தமளிக்கிறது. எங்கள் பெற்றோர் மீது அளப்பரிய அன்பும் பரிவும் பொழிந்த பண்பாளராகத் திகழ்ந்தவர் என்னுடைய மனைவிக்கு முதன் முதலாக சென்னையில் அண்ணா சாலையில் செஞ்சுரி வணிக வளாகத்தில் தன் உடன் பிறந்தவர்களுடன் நடத்தி வந்த கணினி சார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பினை வழங்கிய பெருந்தகையாவார். அண்ணலை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நெருங்கிய உறவுகளான வழக்கறிஞர் கருணாநிதி திருமதி சாந்தி எழில் ஆகியோருக்கும் இரங்கலை தெரிவித்த ...
நூல் வெளியீட்டு விழா
ஒய் எம் சி ஏ பட்டிமன்ற அரங்கத்தில்செவ்வாய்க்கிழமையன்று 11.3.25 மாலை நடைபெற்ற நூல்கள் வெளியீடு மற்றும் திறனாய்வுக் கூட்டத்தில் தலைமை தாங்கி உரையாற்றினேன்
POST: 2025-03-13T10:09:47+05:30
நூல் வெளியீட்டு விழா ஒய் எம் சி ஏ பட்டிமன்ற அரங்கத்தில் செவ்வாய்க்கிழமையன்று 11.3.25 மாலை நடைபெற்ற நூல்கள் வெளியீடு மற்றும் திறனாய்வுக் கூட்டத்தில் தலைமை தாங்கி உரையாற்றினேன்
உலகத்தமிழ் இதழ் – 275
"செந்நெல் அரிநர்கூர்வாள்- புண்ணுற…எனத் தொடங்கும் அம்மூவனாரின் நற்றிணைப் பாடல் இருநூற்(று) எழுபத்(து) ஐந்து அருஞ்சொல் அணிவகுத்துப் பெருந்திரளாகக், கட்டுரைமணிகளாக மிளிரும் உலகத் தமிழிதழ் இருநூற்(று) எழுபத்(து) ஐந்து. 275 உலகத்தமிழ் 12032025_compressedDownload
POST: 2025-03-12T08:38:38+05:30
"செந்நெல் அரிநர் கூர்வாள்- புண்ணுற... எனத் தொடங்கும் அம்மூவனாரின் நற்றிணைப் பாடல் இருநூற்(று) எழுபத்(து) ஐந்து அருஞ்சொல் அணிவகுத்துப் பெருந்திரளாகக், கட்டுரை மணிகளாக மிளிரும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) எழுபத்(து) ஐந்து.
POST: 2025-03-11T10:33:27+05:30
எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! தமிழ் வளர்ச்சித் துறை திருவண்ணாமலை மாவட்டம் தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் நினைவுபோற்றும் இலக்கியக் கருத்தரங்கம் 2024-2025 நாள்: திருவள்ளுவராண்டு 2056 / மாசி 27 11.03.2025 (செவ்வாய்கிழமை) காலை 9.30 மணி இடம்: கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி திருவண்ணாமலை தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் நினைவுபோற்றும் இலக்கியக் கருத்தரங்கம் 2024 2025 நிகழ்ச்சி நிரல் முற்பகல் 09.30 மணி மங்கல இசை (அரசு இசைப்பள்ளி மாணவர்கள்) முற்பகல் 10.00 மணி தமிழ்த்தாய் வாழ்த்து வரவ ...
மகளிர் தின வாழ்த்துகள்!
பெண்ணின் பெருமை பேசிமுடியாது !பெருமையால் உலகை மகிழ்வாக்கிய பெண்மணிகளே !உலகை உருவாக்கிய பொன்மணிகளே !எத்தனைக் கோலங்கள் !மகளாய், மனைவியாய், தாயாய், மாமியாய், பாட்டியாய் மனங்கவரும் தெய்வமாய்அத்தனை நிலைகளிலும்எங்கள் நெஞ்சைக் கரைத்ததாரகை நீங்கள்அழுதபோது ஆறுதல் சொல்வீர்கள்.தொழுதபடியே எத்தனைப் பணிகளைதுறைதோறும் அழகு செய்தீர்கள்மாதர்களே நீங்கள் மாணிக்கங்கள்கும்பிட்டுப் புகழ்வதைத் தவிரஎன்ன செய்ய முடியும்.நாங்கள் கூழாங்கற்கள்நீங்களோவைரக் கற்கள், வான நிலாக்கள், வற்றாத அருவிகள்மகளிர் பெருமையை எழுதஎன் விர ...
POST: 2025-03-10T08:47:28+05:30
உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை உலகத் தமிழ்ச் சங்க நிறுவனர் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களின் 108ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் நிறுவனர் நாள் விழா அழைப்பிதழ் 08.03.2025 முற்பகல் 09.30 மணி உலகத் தமிழ்ச் சங்கக் கூட்ட அரங்கம், மதுரை தொடக்க விழா வரவேற்புரை : முனைவர் ஜ.ஜான்சிராணி அவர்கள் ஆய்வு வளமையர். உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை தலைமையுரை : முனைவர் ஒளவை ந.அருள் அவர்கள் இயக்குநர் (மு.கூ.பொ). உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை சிறப்புரை : முனைவர் மேகலா சித் ...
தடுப்பூ எங்கள் தோளைத்தொட்டது !
மகளிர் தினத்தில் மாதர் மாட்சியை நினைத்தேன் .என் மனத்தரசியின் இழப்பை எண்ணி ஆற்ற முடியாமல் சில நொடிகள் கண் கலங்கினேன் . என் அருமைப் பெயர்த்தியும் , எங்கள் குடும்பத்தின் நிகரிலாச் செல்வமும் ஆகிய டாக்டர் நிகிதா தாரா கண்ணன் எனக்கு ஆசுதிரிலேயாவிலிருந்து " மகிழ்ச்சியில் திளைக்கும் மனிதன் " (The Happiest Man on Earth ) என்ற இனிய நூலை எனக்கு அனுப்பிக் " கண்ணீரைத் துடைத்துக் கொள்ளுங்கள் .கருத்தோடு இந்த நூலைப் படித்து மனத்தளர்ச்சியை நீக்கிக் கொள்ளுங்கள் தாத்தா " என்று எழுதியுள்ளார் . இந்த நாளில் ...
POST: 2025-03-09T09:29:54+05:30
செய்தி வெளியீடு 8.3.25 ஈராயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மக்கள் நன்கு அறிந்திருக்கும் புலவர் பெருமாட்டியருள் ஔவையாரின் அருமைத் திருப்பெயர் என்றும் அழியாமல் நிலைத்திருக்கும் திருப்பெயரும் தவப்பெயருமாகும். ‘அகர முதல எழுத்தெல்லாம்' என்பது போல ஒளவை முதல அறிவெல்லாம் என்று அறிவுக்கே உரிய பெயராக ஔவையார் ஆண், பெண், இளைஞர், முதியர் ஆகிய எல்லோராலும் வழிபாட்டுணர்ச்சியோடு வணங்கப்படுகிறார். அதியமானுக்காகக் காஞ்சியிலிருந்து ஆட்சிப்புரிந்த தொண்டைமானிடம் தூது சென்று நிகழவிருந்த போரை நிறுத்திய பெருமை மிக்கவர் ...




