தண்புனக் கருவிளைக் கண்போல் மாமலர் ... எனத் தொடங்கும் பெருந்தலைச் சாத்தனாரின் நற்றிணைப்பாடல் எண் இருநூற்(று) அறுபத்(து) இரண்டு; கண்போன்ற தமிழாய்ந்த அறிவார்ந்த அறிஞர்தம் அருங்கட்டுரைகளை ஐந்தாண்டுகளாய் அழகுற வெளியிட்டுவரும் உலகத் தமிழிதழ் இருநூற்(று) அறுபத்(து) இரண்டு.
ததும்பிய காதலும்-நிறைந்த வாழ்வும்
இன்றைய நாள் ( 10 - 12 - 2024) எங்கள் பெற்றோர்களின் 63 ஆம் ஆண்டு திருமண நாளை நினைவூட்டுகிறது திருப்பரங்குன்றத்தில் பெற்றோர்களின் திருமணம்(10.12.1961) நடைபெற்றது. 59 ஆண்டுகள் இல்ல விளக்குகளாக பேரொளியில் இணைந்து வாழ்ந்து கலந்து விட்டாலும்… நினைவெல்லாம் அவர்கள் இருவர் வாழ்ந்த பெருவாழ்வும் அப்பா அம்மாவின்ஞான ஒளியும் தொடர்ந்துஎங்கள் மூவரையும் வழி நடத்தும் என்பது உறுதி கண்ணன், அருள், பரதன்
POST: 2024-12-10T09:22:18+05:30
ததும்பிய காதலும்- நிறைந்த வாழ்வும் இன்றைய நாள் ( 10 - 12 - 2024) எங்கள் பெற்றோர்களின் 63 ஆம் ஆண்டு திருமண நாளை நினைவூட்டுகிறது திருப்பரங்குன்றத்தில் பெற்றோர்களின் திருமணம்(10.12.1961) நடைபெற்றது. 59 ஆண்டுகள் இல்ல விளக்குகளாக பேரொளியில் இணைந்து வாழ்ந்து கலந்து விட்டாலும்... நினைவெல்லாம் அவர்கள் இருவர் வாழ்ந்த பெருவாழ்வும் அப்பா அம்மாவின் ஞான ஒளியும் தொடர்ந்து எங்கள் மூவரையும் வழி நடத்தும் என்பது உறுதி கண்ணன், அருள், பரதன்
வாழ்த்தும் வணக்கமும்
மேல்சித்தாமூர்,ஜினகஞ்சி சமண மடத்தின் மடாதிபதி, சங்கீதபூஷணம்.Dr. ஸ்வஸ்திஸ்ரீ இலட்சுமிசேன பட்டாரகப் பட்டாச்சார்ய வர்ய ஸ்வாமிகள் 5.9.24 வியாழக்கிழமையன்று அண்ணா நகர் தாரகை இல்லத்திற்கு வருகை புரிந்து பெற்றோர்களைக் குறித்து நீண்ட நேரம் பேசி வாழ்த்தி விடைபெற்றார்.
POST: 2024-12-09T07:05:26+05:30
வாழ்த்தும் வணக்கமும் மேல்சித்தாமூர், ஜினகஞ்சி சமண மடத்தின் மடாதிபதி, சங்கீதபூஷணம். Dr. ஸ்வஸ்திஸ்ரீ இலட்சுமிசேன பட்டாரகப் பட்டாச்சார்ய வர்ய ஸ்வாமிகள் 5.9.24 வியாழக்கிழமையன்று அண்ணா நகர் தாரகை இல்லத்திற்கு வருகை புரிந்து பெற்றோர்களைக் குறித்து நீண்ட நேரம் பேசி வாழ்த்தி விடைபெற்றார்.
POST: 2024-12-08T08:02:35+05:30
சிரேணிக காவியம் நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ் சிரேணிகன் கேட்காத கேள்வியில்லை சேலினி நோற்காத நோன்புமில்லை எனும் வரிகளுக்கு சொந்தக்காரன் மாமன்னன் சிரேணிக ராஜனின் வரலாறு, இனிய தமிழில் வசனக் கவிதையில்... நாள் : 8.12.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் 1.30 மணி வரை இடம் : இராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி (வடக்கு) இன்போசிஸ் ஹால், வடக்கு உஸ்மான் சாலை (விவேக் & கோ அருகில்) தி.நகர், சென்னை - 600 017. அன்புடையீர், வணக்கம், வரலாற்று நாயகர் வர்த்தமான மஹாவீரர் காலத்தில் வாழ்ந்த பேரரசன் சிரேணிகன ...
வற்றாத வரலாற்றுக் களஞ்சியம் வாழி!
94 அகவை நிறைந்த பத்மஸ்ரீ விருது பெற்ற அறிஞர்,தில்லிப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர், எழுத்தாளர், திறனாய்வாளர், சாகித்திய அகாதமி இலக்கிய விருதினை குருதிப்புனல் புதினத்திற்காக 1977 ஆம் ஆண்டிலேயே பெற்றதோடுகே கே பிர்லா அறக்கட்டளை வாயிலாக இராமானுஜர் நாடகத்திற்கானசரசுவதி சம்மான் விருதினை 1999 ஆம் ஆண்டில் பெற்ற பெருந்தகையாளர் இந்திரா பார்த்தசாரதி அவர்களை 8.9.24 ஞாயிற்றுக்கிழமையன்று நேரில் சந்தித்து நீண்ட நேரம் பேசி மகிழ்ந்தேன். அந்நாள் அவர் மகள் திருமதி பத்மாவின் பிறந்தநாள் என ...
POST: 2024-12-07T08:16:33+05:30
வற்றாத வரலாற்றுக் களஞ்சியம் வாழி! 94 அகவை நிறைந்த பத்மஸ்ரீ விருது பெற்ற அறிஞர், தில்லிப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர், எழுத்தாளர், திறனாய்வாளர், சாகித்திய அகாதமி இலக்கிய விருதினை குருதிப்புனல் புதினத்திற்காக 1977 ஆம் ஆண்டிலேயே பெற்றதோடு கே கே பிர்லா அறக்கட்டளை வாயிலாக இராமானுஜர் நாடகத்திற்கான சரசுவதி சம்மான் விருதினை 1999 ஆம் ஆண்டில் பெற்ற பெருந்தகையாளர் இந்திரா பார்த்தசாரதி அவர்களை 8.9.24 ஞாயிற்றுக்கிழமையன்று நேரில் சந்தித்து நீண்ட நேரம் பேசி மகிழ்ந்தேன். அந்நாள் அவர் மகள் திருமதி ...
அன்பின் வழியது உயிர்நிலை
இனிய நண்பர் வழக்கறிஞர் சதீஷ் திருமதி இரஞ்சனி இணையரின் ஒரே மகன் அறிவுத்திலகம் சஸ்வத்குமார்பண்புத்திலகம் அனாகா திருமண உறுதி நிகழ்வில் (8.9.24) ஞாயிற்றுக்கிழமை காலை திருவான்மியூரில் அமைந்துள்ள துவாரகா வள மண்டபத்தில் கலந்து கொண்டு வாழ்த்தி மகிழ்ந்தேன். அன்றைய நிகழ்ச்சியில் கவிஞர் சதீஷின் தாயார் திருமதி வசந்தா சீனிவாசன் என்னைக் கண்டதும் பரிவு காட்டி அன்பாக வாழ்த்திய தருணம் நெகிழ்வாக அமைந்தது.





